தமிழக செய்திகள்

மோட்டார் சைக்கிளில் கடத்திய 4 கிலோ கஞ்சா பறிமுதல்

நாமக்கல்லில் மோட்டார் சைக்கிளில் கடத்தி வரப்பட்ட 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினத்தந்தி

4 கிலோ கஞ்சா பறிமுதல்

நாமக்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்லத்துரை மற்றும் போலீசார் ராமாபுரம்புதூர் பகுதியில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பேது அந்த வழியாக சந்தேகப்படும்படியாக மேட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் அவர்கள் எம்.மேட்டுப்பட்டி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த ரூபன் என்கிற தேவரூபன் (வயது35) என்பதும், மற்றொருவர் நாமக்கல் குட்டைமேலத்தெருவை சேர்ந்த சரவணன் (26) என்பதும், மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தி வருவதும் தெரியவந்தது. அவர்கள் கொண்டு வந்த சாக்கு பையை போலீசார் பறிமுதல் செய்து, சோதனை செய்தனர். அப்போது அதில் 4 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

2 பேர் கைது

இதையடுத்து ரூபன், சரவணன் ஆகிய 2 பேரையும் கைது செய்த போலீசார், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கஞ்சாவை மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்