தமிழக செய்திகள்

கத்தியை காட்டி பணம் பறித்த 2 பேர் கைது

கத்தியை காட்டி பணம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

திருச்சி பீமநகர் நியூராஜா காலனியை சோந்தவர் சுந்தரேசன் (வயது 54). இவர் நேற்று முன்தினம் காலை திண்டுக்கல் ரோடு கோரையாறு பாலம் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது, தாராநல்லூர் தோப்பு தெருவை சோந்த திவாகர் (21), கிரண்குமார் (22) ஆகியோர் சுந்தரேசனிடம் பணம் கேட்டுள்ளனா. ஆனால் அவர் பணம் தர மறுத்துள்ளார். இதையடுத்து அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.600-ஐ பறித்தனர். இது குறித்த புகாரின்பேரில் செசன்ஸ் கோர்ட்டு போலீசார் 2 பேரையும் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள், கண்டோன்மெண்ட் லாசன்ஸ்ரோடு பகுதியில் சோமரசம்பேட்டையை சேர்ந்த ஜான்செல்வராஜ் (23) என்பவரது மோட்டார் சைக்கிளையும் திருடியது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து