தமிழக செய்திகள்

தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது

திண்டுக்கல் அருகே தொழிலாளியை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

திண்டுக்கல் அருகே உள்ள பொன்மாந்துறை புதுப்பட்டி, நல்லேந்திரபுரத்தை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 32). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் இவர், பொன்மாந்துரை புதுப்பட்டி சாலையில் நடந்து சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த ஜெயகிருஷ்ண கண்ணன் (20), காடு என்ற அன்பழகன் (20) ஆகிய 2 பேரும் சேர்ந்து அன்பழகனை வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர். மேலும் அவரை உருட்டுக்கட்டையால் தாக்கினர். இதில் காயமடைந்த அன்பழகனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலைச்சாமி வழக்குப்பதிவு செய்து, அன்பழகனை தாக்கிய ஜெயகிருஷ்ண கண்ணன், காடு என்ற அன்பழகன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை