தமிழக செய்திகள்

34 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்- பெண் உள்பட 2 பேர் கைது

34 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்

தினத்தந்தி

நெல்லை அருகே தாழையூத்து போலீசார் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது தாழையூத்து சரஸ்வதி நகரை சேர்ந்த உமா (வயது 33) மற்றும் தச்சநல்லூரை சேர்ந்த முத்துவேல் (49) ஆகிய இருவரும் தாழையூத்து தனியார் பள்ளி அருகே புகையிலை பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து தாழையூத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் வழக்குப்பதிவு செய்து உமா மற்றும் முத்துவேல் ஆகிய 2 பேரையும் கைது செய்தார். அவர்களிடமிருந்து 34 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்