தமிழக செய்திகள்

2 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

பழனியில் 2 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தினத்தந்தி

பழனியில் உள்ள கடை, வணிக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதாக அதிகாரிகளுக்கு புகார் வந்தது. அதன்பேரில் நகராட்சி ஆணையர் பாலமுருகன் தலைமையில் நகர்நல அலுவலர் மனோஜ்குமார், சுகாதார ஆய்வாளர்கள் பழனி நகர் பகுதியில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்களில் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது 12 கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த 2 டன் பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர். மீண்டும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று கடைகளின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். இதற்கிடையே பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை நகராட்சி ஊழியர்கள் அழித்தனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு