தமிழக செய்திகள்

2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

குளச்சல் அருகே 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

குளச்சல், 

குளச்சல் சப் - இன்ஸ்பெக்டர் தேவராஜ் மற்றும் போலீசார் நேற்று மாலை குளச்சல் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது வாணியக்குடி பகுதியில் மீன் கடை அருகில் மறைவான இடத்தில் மூடைகள் கிடந்தன. அவற்றை பிரித்து பார்த்த போது ரேஷன் அரிசி இருந்தது. 40 மூடைகளில் இருந்த 2 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து, வாகனம் மூலம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரித்தனர். அப்போது அந்த ரேஷன் அரிசி மூடைகளை கேரளாவுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்து இருந்தது தெரிய வந்தது. ரேஷன் அரிசி மூடைகளை பதுக்கி வைத்தவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...