தமிழக செய்திகள்

மதுவிற்ற 2 பெண்கள் கைது

அரக்கோணம் அருகே மதுவிற்ற 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

அரக்கோணம்

அரக்கோணம் அருகே பருத்திபுத்தூர், கும்பினிபேட்டை ஆகிய பகுதிகளில் அரசு அனுமதியின்றி மதுபாட்டில் விற்கப்படுவதாக அரக்கோணம் கலால் இன்ஸ்பெக்டர் லதாவிற்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரின் அவரது தலைமையிலான போலீசார் பருத்திபுத்தூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த பெண்ணை பிடித்து விசாரித்தனர்.

அதில் அவர் அதே பகுதியை சேர்ந்த அனிதா (வயது 31) என்பதும், மது விற்பனை செய்ததும் தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 12 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.

இதேபோன்று கும்பினிபேட்டை பகுதியில் அதே பகுதியை சேர்ந்த கவுரி (46) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் இருந்து 12 மதுபாட்டில்களை கலால் போலீசார் பறிமுதல் செய்தனர். 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து