தமிழக செய்திகள்

20 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்ககோரி பிரதமர் மோடிக்கு தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

20 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்ககோரி பிரதமர் மோடிக்கு தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.

சென்னை

20 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை தமிழ்நாட்டுக்கு அனுப்பக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார். 10 நாட்களுக்கு தேவையான தடுப்பூசிகளை முன்கூட்டியே அனுப்பி வைக்க வேண்டும். ரெம்சிடிவிர் தயாரிக்கும் மாநிலங்கள், பிற மாநிலங்களுக்கும் அந்த மருந்தை அனுப்பி உதவ அனுமதிக்க வேண்டும் என்று அக்கடிதத்தில் அவர் கேட்டு கொண்டு உள்ளார்.