தமிழக செய்திகள்

ஆலங்குடியில் 20 லிட்டர் சாராயம் பறிமுதல்

ஆலங்குடியில் 20 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

தினத்தந்தி

ஆலங்குடி ரெகுநாதபுரம், அழகன்விடுதி, பறையன்குளம் பகுதிகளில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணமல்லி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சாராயத்தை விற்பனை செய்து கொண்டிருந்த ஆலங்குடி அருகே மேட்டுப்பட்டி திருக்கட்டளையை சேர்ந்த ராஜ்குமார் மகன் சிவகுமார் (வயது 23) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 20 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து போலீசார் சிவகுமாரை கறம்பக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ரேவதி முன்பு ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை