தமிழக செய்திகள்

ஆவடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை, ரூ.3 லட்சம் திருட்டு

ஆவடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை, ரூ.3 லட்சம் திருட்டு.

ஆவடி,

ஆவடியை அடுத்த பட்டாபிராம் வெங்கடேஸ்வரா நகர் டிரைவர்ஸ் காலனியை சேர்ந்தவர் கீர்த்திராஜ் (வயது 21). இவர், தனது தாயார் தனம் மற்றும் அக்கா சங்கீதா ஆகியோருடன் வசித்து வருகிறார். இவர், வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் மணலியில் வசிக்கும் தனது பெரியம்மா வீட்டுக்கு சென்றுவிட்டார்.அப்போது மர்மநபர்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்து இருந்த 20 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சத்தை திருடிச்சென்றுவிட்டனர். இது குறித்து ஆவடி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.

அதேபோல் செங்குன்றத்தை அடுத்த பள்ளிகுப்பத்தை சேர்ந்த ஜெகநாதன் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகை, ரூ.5 ஆயிரம் மற்றும் ஒரு கிலோ வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் திருடிச்சென்றுவிட்டனர். இதுபற்றி செங்குன்றம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பெண் விமானிகள் குறித்து அஜித் பவார் வெளியிட்ட பழைய பதிவு வைரல்

இனி சில்லறை பிரச்சினை வராது.. ஏடிஎம்களில் விரைவில் 10, 50 ரூபாய் நோட்டுகள்?

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இபிஎப்ஓ சம்பள உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்கிறதா?

பெண்களுடன் தனிமையில் இருந்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது