தமிழக செய்திகள்

நாகை-இலங்கை கப்பலில் கடந்த ஓராண்டில் 20 ஆயிரம் பேர் பயணம்

மாணவர்களை ஒருங்கிணைத்து அழைத்து வரும் 2 ஆசிரியர்களுக்கு இலவச டிக்கெட் வழங்கப்படுமென கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

நாகை,

நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கப்பல் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். செரியாபாணி என்ற பெயரில் இயக்கப்பட்ட இந்த கப்பலில் போதிய பயணிகள் வராத காரணத்தால் இந்த கப்பல் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 16-ந் தேதி சுபம் நிறுவனத்தின் சார்பில் மீண்டும் சிவகங்கை என்ற பெயரில் கப்பல் சேவை தொடங்கப்பட்டது. இந்த கப்பல் சேவை தொடங்கி நேற்றுடன் (16-ந் தேதி) ஓராண்டு நிறைவு பெற்றது. இதையடுத்து இரண்டாம் ஆண்டு தொடக்க விழா நேற்று நடந்தது. இதில், மும்மதத்தை சேர்ந்தவர்கள் கொடியசைத்து 2-ம் ஆண்டு சேவையை தொடங்கி வைத்தனர்.

பின்னர் கப்பல் நிறுவன உரிமையாளர் சுந்தர்ராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த ஒரு ஆண்டில் 20 ஆயிரத்து 98 பேர் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கும், இந்தியாவில் இருந்து இலங்கைக்கும் பயணம் செய்துள்ளனர். இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு செல்வதற்கு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாணவர்கள் 3 பகல், 2 இரவு இலங்கையில் தங்குவதற்கு கப்பல் டிக்கெட் கட்டணத்தோடு ரூ.9 ஆயிரத்து 999 என சிறப்பு சலுகை திட்டம் உள்ளது. மாணவர்களை ஒருங்கிணைத்து அழைத்து வரும் 2 ஆசிரியர்களுக்கு இலவச டிக்கெட் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து