தமிழக செய்திகள்

பத்திரப்பதிவு மூலம் தமிழ்நாடு அரசுக்கு ஒரே நாளில் ரூ.224.26 கோடி வருவாய்

முகூர்த்த நாள் என்பதால் ஒரே நாளில் 20,310 ஆவணங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதற்கிடையே, ஆனி மாதத்தின் கடைசி சுபமுகூர்த்த தினமான நேற்று சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த நிலையில், பத்திரப்பதிவு மூலம் தமிழ்நாடு அரசுக்கு ஒரே நாளில் அதிக வருவாய் கிடைத்துள்ளது. வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக நேற்று (ஜூலை-12) ஒரே நாளில், பத்திரப்பதிவு மூலம் அரசுக்கு ரூ.224.26 கோடி கிடைத்துள்ளதாகத் தமிழ்நாடு பத்திரப்பதிவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. ஆனி மாத கடைசி முகூர்த்த நாள் என்பதால் ஒரே நாளில் 20,310 ஆவணங்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து