தமிழக செய்திகள்

சின்னசேலத்துக்கு 2,600 டன் பச்சரிசி வந்தது

சரக்கு ரெயில் மூலம் சின்னசேலத்துக்கு 2,600 டன் பச்சரிசி வந்தது.

தினத்தந்தி

சின்னசேலம், 

உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூர் பகுதியில் இருந்து சரக்கு ரெயில் மூலம் 2 ஆயிரத்து 600 டன் பச்சரிசி மூட்டைகள் சின்னசேலம் ரெயில் நிலையத்துக்கு வந்தது. பின்னர் இந்த அரிசி மூட்டைகளை லாரிகள் மூலம் சின்னசேலம் கூகையூர் சாலையில் உள்ள தமிழ்நாடு சேமிப்பு கிடங்குக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இந்த பணியை சேமிப்பு கிடங்கு மேலாளர் பிரபு, துணை மேலாளர் ஆனந்தசரவணன், ஒப்பந்ததாரர் தியாகராஜன், இந்திய உணவு கழக மேலாளர்கள் மோகனகணபதி, ராமலிங்கம் உள்ளிட்டோர் மேற்பார்வையிட்டனர். இந்த பச்சரிசி, பொது வினியோக திட்டத்தின் கீழ குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்க கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்