தமிழக செய்திகள்

264 மது பாட்டில்கள் பறிமுதல்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 264 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸ்நிலைய சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேலு சங்கூரணி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது மகாலிங்கம் (வயது60) என்பவரிடம் சோதனை நடத்திய போது அவரிடம் 223 மது பாட்டில்களும், ரூ.1,930-ம் இருந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த பணம் மற்றும் மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல நகர் போலீஸ்நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மதியழகன் (24) என்பவர் 41 மதுபாட்டில்களும், ரூ.7,020-ம் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த பணம் மற்றும் மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தாடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு