தமிழக செய்திகள்

முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் மீது ரூ.27 லட்சம் மோசடி புகார்

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் மீது ரூ.27 லட்சம் மோசடி செய்ததாக அ.தி.மு.க. பிரமுகர் புகார் அளித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் ஜி.கே.கந்தசாமி. அ.தி.மு.க. பிரமுகரான இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

நான் வடசென்னை மாவட்ட அ.தி.மு.க. மீனவர் அணி பொருளாளராக இருக்கிறேன். முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் மின்சாரத்துறையில் வேலை வாங்கி தருவதாக சொன்னார். அவர் சொன்னதின் பேரில் எனக்கு தெரிந்த 6 பேரிடம் ரூ.27 லட்சம் வசூலித்து கொடுத்தேன். ஆனால் அவர் வேலை வாங்கி தராமல் ரூ.27 லட்சத்தையும் திருப்பித்தராமல் மோசடி செய்து விட்டார். அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுத்து, ரூ.27 லட்சம் பணத்தையும் மீட்டுத்தரும்படி வேண்டுகிறேன்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்