தமிழக செய்திகள்

தூத்துக்குடியில் 272 விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

கலசல் மீன்களுக்கு உரிய விலை கிடைக்காததால் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் 272 விசைப் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 272 விசைப் படகுகளில் சுழற்சி முறையில் மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக மீன்பாடு அதிகமாக இல்லாததால் நஷ்டம் ஏற்பட்டு வருவதாக விசைப்படகு உரிமையாளர்கள் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் விசைப் படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. கலசல் மீன்களுக்கு உரிய விலை கிடைக்காத காரணத்தால் மீன்பிடி தொழிலுக்கு செல்லவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனால் 272 விசைப் படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து