ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள், ஈரோடு மற்றும் கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் விற்பனை சங்கங்களில் நடைபெறும் ஏலத்துக்கு 27-ந் தேதி விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. அன்றைய தினம் மஞ்சள் வணிகர்கள் பங்கேற்க மாட்டார்கள்.
இந்த தகவலை ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்குகள் உரிமையாளர்கள் சங்க செயலாளர் சத்தியமூர்த்தி தெரிவித்து உள்ளார்.