தமிழக செய்திகள்

தொழிலாளி வீட்டில் 28 பவுன் நகை மாயம்

சிவகாசி அருகே தொழிலாளி வீட்டில் 28 பவுன் நகை மாயமானது.

தினத்தந்தி

சிவகாசி, 

சிவகாசி அருகே தொழிலாளி வீட்டில் 28 பவுன் நகை மாயமானது.

நகை மாயம்

சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரம் கீழூரில் வசித்து வருபவர் ராஜாராம் (வயது 58). இவருக்கு மனைவியும், 3 மகன்களும் உள்ளனர். ராஜாராம் கட்டிட தொழில் செய்து வருகிறார்.

இந்த நிலையில் அவரது மனைவிக்கு சொந்தமான நகைகளை வீட்டில் உள்ள பீரோவில் வைத்து உள்ளார். இந்த நிலையில் கடந்த 23.10.2022 அன்று நகைகளை பயன்படுத்திவிட்டு பின்னர் வழக்கம் போல் வீட்டின் பீரோவில் பாதுகாப்பாக வைத்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் நேற்று முன்தினம் நகைகளை சரிபார்த்த போது அதில் 28 பவுன் நகைகளை காணவில்லை.

போலீசார் விசாரணை

இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜாராம் சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பானுமதி, சப்-இன்ஸ்பெக்டர் பாலமுரளி கிருஷ்ணா ஆகியோர் சம்பவம் நடைபெற்ற வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர்.

பீரோ உடைக்கப்படாத நிலையில் நகைகள் மட்டும் காணாமல் போனதால் போலீசார் குழப்பம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து