தமிழக செய்திகள்

2-வது சுற்று முடிவு: நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் முன்னிலை

நாங்குநேரி தொகுதியில் 2-வது சுற்றின் முடிவில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் முன்னிலையில் உள்ளார்.

நெல்லை,

நாங்குநேரி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த வசந்தகுமார் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி. ஆனார். அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததால் நாங்குநேரி தொகுதிக்கு கடந்த 21-ந் தேதி இடைத்தேர்தல் நடந்தது.

இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் ரெட்டியார்பட்டி நாராயணன், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ரூபி மனோகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் ராஜ்நாராயணன் உள்பட 23 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் மொத்தம் 66.35 சதவீத வாக்குகள் பதிவாகின.

இந்நிலையில் தற்போது நாங்குநேரி தொகுதியில் 2-வது சுற்றின் முடிவில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் 9,327 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ரூபி மனோகரன் 6,353 வாக்குகள் பெற்று உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜ்நாராயணன் 127 வாக்குகள் பெற்று உள்ளார்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை