தமிழக செய்திகள்

லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது

லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

நாகை மாவட்டம் திட்டச்சேரி பள்ளிவாசல் தெருவை சேர்ந்த அசனுதீன் (வயது 54), திட்டச்சேரி ஆற்றங்கரை தெருவை சேர்ந்த ரமேஷ் (36), திட்டச்சேரி தெற்கு தெருவை சேர்ந்த பகுருதீன் (42) ஆகிய 3 பேரும் வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட லாட்டரிகளை விற்பனை செய்வதாக திட்டச்சேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் சுரேஷ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் டென்னிசன், வீரப்பிள்ளை மற்றும் போலீசார் நடத்திய விசாரணையில் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றது தெரியவந்தது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அசனுதீன், ரமேஷ், பகுருதீன் ஆகியோரை கைது செய்தனர். 

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்