தமிழக செய்திகள்

ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது

ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது

நெல்லை மாவட்ட உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டைசாமி தலைமையில் களக்காடு பகுதியில் போலீசார் திடீர் வாகன சோதனை நடத்தினர். நாங்குநேரி -களக்காடு ரோட்டில் புதூர் சந்திப்பு பகுதியில் சோதனை நடத்தியபோது மினி லாரியில் 16 மூட்டைகளில் 640 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்த 2 பேர் சிக்கினர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மேல திடியூரை சேர்ந்த மாரியப்பன் (வயது 37), முருகன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ரேஷன் அரிசி மற்றும் ஒரு மினி லாரி, ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல் களக்காடு- நாங்குநேரி மெயின் ரோட்டில் ஜே.ஜ.நகர் பகுதியில் வாகன சோதனை நடத்தியபோது ஒரு மினி லாரியில் 8 மூட்டைகளில் 400 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்ததை பிடித்தனர். இதுதொடர்பாக கடம்போடு வாழ்வு சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த சுந்தர் என்ற சுந்தரபாண்டியன் (32) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரேஷன் அரிசி மற்றும் மினிலாரி பறிமுதல் செய்யப்பட்டது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...