தமிழக செய்திகள்

குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி

குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பலியானார்கள்.

தினத்தந்தி

கோவை,

கோவை அருகே சூலூரை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் ஜஷ்வந்த் (வயது 8), அன்பு என்பவருடைய மகன் அகிலன் (10), கணேஷ் என்பவருடைய மகன் சஞ்சீவ் (7) ஆகியோர் அங்குள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தனர்.

இந்த நிலையில் அந்த மாணவர்கள் 3 பேரும், நேற்று மாலை 4.30 மணிக்கு பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தனர். பின்னர் விளையாட செல்வதாக பெற்றோரிடம் கூறி விட்டு, சூலூர் சின்னகுளம் பகுதிக்கு சென்றனர். அங்குள்ள குளத்துக்குள் இறங்கி குளித்தனர். ஆனால் அவர்களுக்கு நீச்சல் தெரியாது.

3 பேரும் சாவு

இதற்கிடையில் திடீரென ஆழமான பகுதிக்கு சென்றதால் 3 சிறுவர்களும் தண்ணீரில் மூழ்கினார்கள். அப்போது ஒருவரையொருவர் காப்பாற்ற முயன்றபோது 3 பேரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்