தமிழக செய்திகள்

3 பேர் உயிரிழந்த விவகாரம்: மதுபான விடுதி உரிமையாளர் ஜாமீனில் விடுவிப்பு

விடுதியின் உரிமையாளர் அசோக் குமார் நேற்று காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.

தினத்தந்தி

சென்னை,

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மதுபான விடுதியில் கடந்த 28 ஆம் தேதி மாலை முதல் மாடியின் மேல்தளம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த மேக்ஸ் என்ற வாலிபர், திருநங்கை லவ்லி மற்றும் திண்டுக்கல்லை சேர்ந்த சைக்ளோன் ராஜ் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர்களில் விடுதி மேலாளர் சதிஷ் கைது செய்யப்பட்டார். மேலும் விடுதியின் உரிமையாளரான அசோக் குமார் தப்பி ஓடி தலைமறைவாகிய நிலையில் நேற்று இரவு அவர் அபிராமபுரம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.

அவரிடம் போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். சுமார் 6 மணி நேர விசாரணைக்கு பின் அசோக் குமார் காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.  

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து