தமிழக செய்திகள்

கஞ்சா விற்ற 3 பேர் கைது

கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக கரூர் டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் பல்வேறு குழுக்களாக பிரிந்து பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது கரூர்- திருச்சி சாலையில் காந்திகிராமம் அருகில் கஞ்சா வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த அலெக்சாண்டர்(வயது 22), வெங்கைக்கல்பட்டி பகுதியில் கஞ்சா விற்ற கல்லுமடையை சேர்ந்த அஜய் மோகன்குமார், சொக்காலியூர் பகுதியில் கஞ்சா விற்ற மதுரை அண்ணா நகரை சேர்ந்த கண்ணன்(25) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 3 கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்