தமிழக செய்திகள்

வாலிபரை தாக்கி செல்போன் பறிப்பு- சிறுவன் உள்பட 3 பேர் சிக்கினர்

வாலிபரை தாக்கி செல்போன் பறித்த சிறுவன் உள்பட 3 பேர் சிக்கினர்

தினத்தந்தி

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தம்பிபட்டியை சேர்ந்தவர் காளி (வயது 20). சம்பவத்தன்று இவர் புதூர் மாட்டுத்தாவணி 120 அடி ரோட்டில் நடந்து சென்றார். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து தாக்கி அவரிடமிருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பியது. இது குறித்த புகாரின் பேரில் புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி புதூர் சம்பக்குளத்தை சேர்ந்த சக்திவேல் (22), பாண்டி (23) மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்தனர். மலைச்சாமி என்பவரை தேடி வருகிறார்கள்.

மதுரை தமிழ்சங்கம் ரோடு மணிநகரம் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் (33). சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் உள்ள கடையில் பொருட்கள் வாங்கி கொண்டிருந்த போது அவரது செல்போனை வாலிபர் ஒருவர் பறித்து சென்றார். அவரை விரட்டி சென்று பிடித்து திலகர்திடல் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் அவர் ஆண்டிப்பட்டி, கொண்டமநாயக்கன்பட்டியை சேர்ந்த பிரசாந்த் (26) என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். 

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்