தமிழக செய்திகள்

தம்பதி உள்பட 3 பேர் காயம்

மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில், தம்பதி உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.

தினத்தந்தி

வடமதுரை அருகே உள்ள பில்லமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கணேசன் (வயது 25). அவருடைய மனைவி வினோதினி (23). கடந்த 26-ந்தேதி இவர்கள், ம.மூ.கோவிலூர் பிரிவில் இருந்து பில்லமநாயக்கன்பட்டி செல்லும் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, பில்லமநாயக்கன்பட்டியை சேர்ந்த சிவக்குமார் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் அவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 3 பேரும் படுகாயம் அடைந்தனர். கணேசன், வினோதினி ஆகியோருக்கு திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மதுரை அரசு மருத்துவமனையில் சிவக்குமார் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்