தமிழக செய்திகள்

மது விற்ற 3 பேர் கைது

மது விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

கறம்பக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மார்டின் ராஜ் மற்றும் போலீசார் மஞ்சுவிடுதி, கறம்பக்குடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த வைத்தியலிங்கம் (வயது 50), ஆசைத்தம்பி (45) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 40 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

அன்னவாசல் அருகே குடுமியான்மலை பகுதியில் மது விற்கப்படுவதாக அன்னவாசல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் குடுமியான்மலை நெல்லி ஊரணி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்ட குடுமியான்மலை உப்புபாறைய சேர்ந்த ராஜமாணிக்கம் (வயது 23) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்