தமிழக செய்திகள்

மது விற்ற 3 பேர் கைது

மது விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஊட்டி, 

ஊட்டியில் சட்டவிரோத மது விற்பனை அதிகரித்து இருப்பதாக தொடர்ந்து புகார் வந்தது. இதையடுத்து போலீசார் கடந்த சில நாட்களாக கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் ஊட்டி ஊரக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தன்ராஜ் தலைமையிலான போலீசார் அப்புகோடு பகுதியில் சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் நஞ்சநாடு கிராமத்தை சேர்ந்த செல்வன் என்பதும், மதுபாட்டில்கள் விற்பனை செய்ததும் தெரியவந்தது. தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் கோடநாடு காட்சி முனை பகுதியில் மது விற்பனை செய்து கொண்டிருந்த கோடநாடு பகுதியை சேர்ந்த ஏசுதாஸ் (வயது 51), தேனாடுகம்பை அடுத்த மொடக்கொம்பை பகுதியில் மது விற்ற கெந்தொரை பகுதியை சேர்ந்த சுரேஷ் (41) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்