தமிழக செய்திகள்

மது விற்ற 3 பேர் கைது

மது விற்ற 3 பேர் கைது

ஊட்டி

ஊட்டி மத்திய பஸ் நிலையம் அருகே அம்மா உணவகம் உள்ள பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் சுரேந்திரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். உடனே கையில் வைத்திருந்த பையை வாங்கி போலீசார் சோதனை செய்தனர். அதில் மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது.

பின்னர் நடந்த கிடுக்கிப்பிடி விசாரணையில் அவர், ஊட்டியை சேர்ந்த செரிப் என்பதும், சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, 40 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோன்று ஊட்டி குழந்தை இயேசு ஆலயம் பகுதியில் மது விற்ற எல்க்ஹில் பகுதியை சேர்ந்த அபுதாஹிர், கல்லட்டி பகுதியில் மது விற்ற ரவிச்சந்திரன் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 53 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்