தமிழக செய்திகள்

மீமிசல் பகுதியில் கஞ்சா விற்ற 3 பேர் கைது

மீமிசல் பகுதியில் கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்த மகேஷ் (வயது 50), சுந்தரம் (35), மோகன் (52) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களிடமிருந்து 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

SCROLL FOR NEXT