தமிழக செய்திகள்

மதுபானம் விற்ற 3 பேர் கைது

வேடசந்தூர் பகுதியில் மதுபானம் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

வேடசந்தூர் பகுதியில் நேற்று முன்தினம் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது பூத்தாம்பட்டி பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே மதுபானம் விற்ற தேவகவுண்டன்பட்டியை சேர்ந்த கண்ணன் (வயது 37) என்பவரை பிடித்தனர். அவரிடம் இருந்து 7 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் வேடசந்தூர்-கரூர் ரோட்டில் உள்ள ஒரு டீக்கடை முன் மதுபானம் விற்ற கன்னிவாடியை சேர்ந்த வேல்ராஜ் (30), வெள்ளையகவுண்டனூரை சேர்ந்த தர்மர் (40) ஆகியோரை பிடித்தனர். அவர்களிடம் இருந்து 19 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்ராஜ் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்