தமிழக செய்திகள்

சூதாடிய 3 பேர் சிக்கினர்

பாப்பிரெட்டிப்பட்டி

பொம்மிடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஷ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கதிரிபுரம் ரேஷன் கடை முன்பு புளிய மரத்தின் அடியில் சூதாடி கொண்டிருந்தவர்கள் போலீசில் சிக்கினர். விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (வயது 48), வெங்கடேஷ் (24), விழுதிப்பட்டியை சேர்ந்த சென்னப்பன் (39) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT