தமிழக செய்திகள்

தொழிலாளியை தாக்கிய வழக்கில் வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

தொழிலாளியை தாக்கிய வழக்கில் வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஆத்தூர் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

தினத்தந்தி

ஆத்தூர்:

ஏத்தாப்பூர் அருகே உள்ள அபிநவம் பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 39), தொழிலாளி. இவருக்கும், வாழப்பாடி அருகே உள்ள சென்ராயன்பாளையத்தை சேர்ந்த சங்கர் மகன் யுவராஜ் (23) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த 3.2.2021 அன்று யுவராஜ், ராமமூர்த்தி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது யுவராஜ் உருட்டு கட்டையால் ராமமூர்த்தியை தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இது குறித்த புகாரின் பேரில் ஏத்தாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து யுவராஜை கைது செய்து விசாரணை நடத்தினர். மேலும் இந்த வழக்கு விசாரணை ஆத்தூர் குற்றவியல் நடுவர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு முனுசாமி, குற்றம்சாட்டப்பட்ட யுவராஜிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்