தமிழக செய்திகள்

கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது

சோளிங்கரில் கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட எசையனூர் மயான பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர்க்ள மோகன்ராஜ், மோகன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

அப்போது போலீசாரை பார்த்தும் முட்புதரில் இருந்து தப்பி ஓட முயன்ற 3 பேரையும் போலீசார் மடக்கி பிடித்து விசாரணை செயதனர். இதில் கஞ்சா விற்பனை செய்வது உறுதியானது. தொடர்ந்து விற்பனைக்காக வைத்திருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மேலும் அவர்கள் திருவள்ளூர் மாவட்டம் அய்யனேரி பகுதியை சேர்ந்த ரஞ்சித் (வயது 23), ராணிப்பேட்டை மாவட்டம் கீழ்கண்டமோட்டூர் பகுதியை சேர்ந்த சேகர் (24), வெங்கடேசன் (26) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். 

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை