தமிழக செய்திகள்

தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது

தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

ஆற்காடு

தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

ஆற்காட்டில் இருந்து செய்யாறு செல்லும் பைபாஸ் சாலையில் ஆற்காடு டவுன் போலீசார் நேற்று முன் தினம் மாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருதனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாக வந்த 3 வாலிபர்களை பிடித்து விசாரணை செய்தனர்.

அவர்கள ராணிப்பேட்டையை அடுத்த அடுத்த மாந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த ரமணா (வயது 22), மாந்தாங்கல் பத்மாபுரத்தைச் சேர்ந்த சர்மா (25) வாலாஜாவை அடுத்த தேவதானம் பகுதியைச் சேர்ந்த தருண் (20) கடந்த 3 நாட்களுக்கு முன்பு இரவு ஆற்காடு பைபாஸ் சாலை தனியார் கல்லூரி அருகே மோட்டார்சைக்கிளின் முன் சீட்டில் வைத்திருந்த செல்போனை திருடியவர்கள் என்பதும் சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தொடர் வழிப்பறி திருட்டில் ஈடுபட்டு இருப்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறிமுதல் செய்தனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்