தமிழக செய்திகள்

கார்-லாரி மோதலில் 3 வாலிபர்கள் பலி

செங்கத்தில் கார்-லாரி நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 3 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தினத்தந்தி

செங்கத்தில் கார்-லாரி நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 3 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கார்-லாரி மோதல்

திருப்பத்தூர் மாவட்டம் காக்கனாம் பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் யோகேஷ் (வயது 25), ஆகாஷ் (20), கவுதம மணிகண்டன் (28). இவர்கள் 3 பேரும் காக்கனாம் பாளையத்தில் இருந்து திருச்சி செல்வதற்காக காரில் வந்து கொண்டிருந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புறவழிச்சாலையில் கார் வந்து கொண்டிருந்தபோது, திண்டிவனத்தில் இருந்து சரக்கு ஏற்றிக்கொண்டு பெங்களூரு நோக்கி சென்ற லாரியும், இவர்களது காரும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.

3 பேர் பலி

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த யோகேஷ், ஆகாஷ், கவுதம மணிகண்டன் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த செங்கம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காரில் சிக்கியிருந்த 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து செங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை