தமிழக செய்திகள்

ஸ்ரீவைகுண்டம் பகுதி மக்களுக்கு இந்திய கடற்படை சார்பில் 3.2 டன் நிவாரண பொருட்கள்

நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய கடற்படை வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் நிவாரண பொருட்களை தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.

தினத்தந்தி

சென்னை,

நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய கடற்படை வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் நிவாரண பொருட்களை தொடர்ந்து வழங்கி வருகின்றனர். அந்த வகையில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஸ்ரீவைகுண்டம் பகுதியில் உள்ள மக்களுக்கு 3.2 டன் நிவாரண பொருட்கள் இந்திய கடற்படை சார்பில் நேற்று வழங்கப்பட்டது.

ஹெலிகாப்டரில் இருந்து தூக்கி வீசப்பட்ட நிவாரண பொருட்களை பொதுமக்கள் லாவகமாக பிடித்தனர்.

அந்த கிராமத்தில் அவசர மருத்துவ உதவி தேவைப்பட்ட முதியோரையும், கர்ப்பிணி பெண்ணையும் 'ஹெலிகாப்டர்' மூலம் இந்திய கடற்படை வீரர்கள் நேற்று மீட்டனர். பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக தூத்துக்குடி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து