தமிழக செய்திகள்

தமிழ்நாட்டில் 38 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் நேற்று 680 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

தினத்தந்தி

சென்னை,

தமிழ்நாட்டில் நேற்று 680 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அந்த வகையில், சென்னையில் 23 பேருக்கும், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரியில் தலா 3 பேருக்கும், வேலூர், காஞ்சீபுரம், கன்னியாகுமரியில் தலா 2 பேருக்கும், கோவை, மதுரை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் என தமிழ்நாட்டில் 38 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 188 ஆக உள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு 39 பேர் வீடு திரும்பியுள்ளனர். நேற்று தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

மேற்கண்ட தகவல் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு