திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் 4 தொகுதி இடைத்தேர்தலில் மனுதாக்கல் முடிந்தது 221 பேர் வேட்பு மனு தாக்கல் இன்று பரிசீலனை
இடைத்தேர்தல் நடைபெறும் திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் சட்டசபை தொகுதிகளில் நேற்றுடன் மனுதாக்கல் முடிந்தது. 4 தொகுதிகளிலும் மொத்தம் 221 பேர் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர். மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது.
தினத்தந்தி
சென்னை,
தமிழக சட்டசபையில் 22 இடங்கள் காலியாக உள்ளன. தமிழகத்தில் கடந்த
18-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடந்த போது, காலியாக உள்ள 22 சட்டசபை தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்றது.