தமிழக செய்திகள்

திருக்கோவிலூர் அருகேமணல் திருட்டு; 4 மாட்டுவண்டிகள் பறிமுதல்

திருக்கோவிலூர் அருகே மணல் திருட்டு சம்பவத்தில் 4 மாட்டுவண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

தினத்தந்தி

திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் அருகே உள்ள எல்ராம்பட்டு கிராமத்தில் தென்பெண்ணையாற்றிலிருந்து மாட்டு வண்டிகளில் மணல் திருட்டு நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் திருக்கோவிலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அன்பழகன், மதன்மோகன் ஆகியோர் தலைமையிலான போலீசார், எல்ராம்பட்டு கிராமத்திற்கு விரைந்து சென்றனர்.

அப்போது அந்த வழியாக மாட்டுவண்டிகளில் மணல் திருடி வந்த சி.மெய்யூர் கிராமத்தை சேர்ந்த மனோகரன் மகன் தங்கராசு, தாண்டவராயன் மகன் பெருமாள், திருவேங்கடம், சூர்யா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து, 4 மாட்டுவண்டிகளையும் பறிமுதல் செய்தனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு