தமிழக செய்திகள்

இலங்கையில் இருந்து மேலும் 4 பேர் தனுஷ்கோடி வருகை..!

இலங்கையில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடி வந்தடைந்தனர்.

தினத்தந்தி

தனுஷ்கோடி,

இலங்கையில் வரலாறு காணாத வகையில் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இலங்கை அரசாங்கத்தின் கையில் நிதியில்லாததால், கடும் நிதிநெருக்கடியில் சிக்கித்தவிக்கிறது. அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததால், வெளிநாட்டிலிருந்து எதையும் இறக்குமதி செய்யமுடியாத சூழ்நிலையில், எல்லா விலையும் விண்ணுக்கு எகிறிவிட்டது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக சில நாள்களுக்கு முன்பு 2 குடும்பங்களைச்சேர்ந்த 16 தமிழர்கள் இலங்கையிலிருந்து அகதிகளாக தமிழகத்தில் தஞ்சமடைந்தனர்.

இந்த நிலையில் இலங்கையில் இருந்து மேலும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடி வந்தடைந்துள்ளனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு