தமிழக செய்திகள்

காட்டுமன்னார்கோவில் பகுதியில் மோட்டார் சைக்கிள் திருடிய 4 பேர் கைது

காட்டுமன்னார்கோவில் பகுதியில் மோட்டார் சைக்கிள் திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

காட்டுமன்னார்கோவில், 

காட்டுமன்னார்கோவில் இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் நேற்று காலை பழஞ்சநல்லூர் மெயின்ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளுடன் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ஸ்ரீமுஷ்ணம் அடுத்த பாளையங்கோட்டை அருகே உள்ள வடக்குப்பாளையம் புது காலனியை சேர்ந்த சிற்றரசன் மகன் தமிழ்ச்செல்வன்(வயது 22), 17 வயதுடைய சிறுவன் என்பதும், இவர்கள் 2 பேர் உள்பட 4 பேர் சேர்ந்து இதுவரை 5 மோட்டார் சைக்கிள்களை திருடியதும் தெரிய வந்தது. இதையடுத்து இவர்கள் 2 பேர் மற்றும் வடக்குப்பாளையம் கிராமத்தை சேர்ந்த வேளாங்கண்ணி மகன் தேவதென்னவன், ஆனந்தராயர் மகன் ஆமோன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 5 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது