தமிழக செய்திகள்

வாலாஜாபாத்தில் பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பு

வாலாஜாபாத்தில் பெண்ணிடம் 4 பவுன் நகை பறித்த 2 மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

தினத்தந்தி

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் பழைய சீவரம் பெரிய காலனி பகுதியை சேர்ந்தவர் முரளி. இவரது மனைவி வரலட்சுமி (வயது 35). வரதாபுரம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் வாலாஜாபாத்தில் நடந்த சத்துணவு பணியாளர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நேரு நகர் பகுதி வழியாக நடந்து வந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து கொண்டு நோட்டமிட்டபடி வந்த 2 மர்ம நபர்கள் திடீரென வரலட்சுமி அணிந்திருந்த 4 பவுன் நகையை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிவிட்டனர்.

இது குறித்து வரலட்சுமி வாலாஜாபாத் போலீஸில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஏதேனும் பதிவாகியுள்ளதா என்று வாலாஜாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேல் மற்றும் போலீசார் ஆய்வு மேற்கொண்டு நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து