தமிழக செய்திகள்

நெல்லையில் கொலை வழக்கில் 4 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது

நெல்லை சந்திப்பு, கருப்பன்துறையைச் சேர்ந்த 4 வாலிபர்கள் கொலை வழக்கில் சம்மந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டு வந்தனர்.

நெல்லை,

நெல்லை சந்திப்பு, கருப்பன்துறையைச் சேர்ந்த சுடலைமணி மகன் கரண்(எ) யேசுவா (வயது 25), சுந்தர்பால் மகன் மாரிமுத்து(20), முருகன் மகன் சிவா(27), சுடலைமணி மகன் கௌதம்(29) ஆகிய 4 பேர், நெல்லை மாநகரப் பகுதியில் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் மேற்சொன்ன 4 பேரும் நெல்லை சந்திப்பு காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டரின் பரிந்துரையின் பேரில் திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனரின் உத்தரவுப்படி நேற்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT