கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோலில் 4.1 ஆக பதிவு

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 4.1 ஆக பதிவானது,

தினத்தந்தி

போர்ட் பிளேர்,

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவில் போர்ட் பிளேருக்கு அருகே இன்று (திங்கள்கிழமை) மாலை 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்தியாவின் தேசிய நில அதிர்வு அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.

இந்த பூகம்பத்தின் மையப்பகுதி இந்தியாவின் போர்ட் பிளேர், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவின் 258 கி.மீ தென்கிழக்கில் இரவு 7.23 மணிக்கு ஏற்பட்டதாகவும், கடற்மேற்பரப்பில் இருந்து 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் உருவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருள்சேதங்கள் மற்றும் உயிர் சேதங்கள் குறித்த உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு