தமிழக செய்திகள்

தாம்பரம் - சென்னை கடற்கரை இடையே இன்று 44 மின்சார ரெயில்கள் ரத்து

தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம் - சென்னை கடற்கரை இடையே இன்று 44 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

சென்னை எழும்பூர் - விழுப்புரம் வழித்தடத்தில் கோடம்பாக்கம் தாம்பரம் இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதையொட்டி தாம்பரம் - சென்னை கடற்கரை இடையேயான, 44 மின்சார ரெயில்கள் இன்று ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, சென்னை கடற்கரை - தாம்பரம் இடையிலான மின்சார ரெயில் சேவை இன்று காலை 10.30 மணியிலிருந்து மதியம் 2.30 மணி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் - கடற்கரை இடையேயான ரெயில் சேவை, இன்று காலை 10 மணி முதல் மதியம் 3:30 மணி வரையும், செங்கல்பட்டு - கடற்கரை இடையேயான ரெயில் சேவை, காலை 9.40 மணி முதல் மதியம் ஒரு மணி வரையும், ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகளின் வசதிக்காக தாம்பரம் - செங்கல்பட்டு இடையே, குறிப்பிட்ட இடைவெளியில் சிறப்பு ரெயில் இயக்கப்படும் எனவும் தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்