தமிழக செய்திகள்

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி: மே 8-15ம் தேதி வரை பயிற்சி முகாம்

மாமல்லபுரத்தில் வரும் 8-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் பயிற்சி முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28-ந் தேதி முதல் ஆகஸ்ட் 10-ந் தேதி வரை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடக்க உள்ளது.

இந்த நிலையில், 44-வது செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்தியா சார்பில் பங்கேற்கும் அணிக்கு மே 8-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை மாமல்லபுரத்தில் பயிற்சி முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் நாட்டை சேர்ந்த பிரபல செஸ் கிராண்ட் மாஸ்டர் போரிஸ் ஜெல்ஃபாண்ட் இந்திய வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா சார்பில் பங்கேற்கும் 3 அணிகளில் தமிழகத்தைச் சேர்ந்த 8 வீரர்கள் பங்கேற்கின்றனர். தமிழகத்தைச் சேர்ந்தவர்களில் 6 பேர் ஆண்கள் பிரிவிலும், 2 பேர் பெண்கள் பிரிவிலும் பங்கேற்கின்றனர்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை