தமிழக செய்திகள்

2-ம் கட்ட அகழாய்வில் 4,600 பொருட்கள் கண்டெடுப்பு

விஜயகரிசல்குளம் 2-ம் கட்ட அகழாய்வில் 4,600 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

தினத்தந்தி

சிவகாசி அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் நடைபெற்று வரும் 2-ம் கட்ட அகழாய்வில் ஆபரணம், சுடு மண்ணால் செய்யப்பட்ட மணி, சிறுவர்கள் விளையாட பயன்படுத்திய சக்கரம் உள்பட பல்வேறு பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதுவரை 4,600-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன. இதனை கண்காட்சியில் வைக்கும் பணிகள் விரைவில் நடைபெற உள்ளது. முதலாம் கட்ட அகழாய்வில் வைக்கப்பட்ட பொருட்கள் கண்காட்சியை இதுவரை பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகள் 29 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளதாக அகழாய்வு இயக்குனர் பொன் பாஸ்கர் கூறினார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து