தமிழக செய்திகள்

சென்னை 46-வது புத்தக கண்காட்சி - வார விடுமுறையை முன்னிட்டு குவிந்த வாசகர்கள்

சென்னை புத்தக கண்காட்சிக்கு இன்று வரை சுமார் 3 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர்.

தினத்தந்தி

சென்னை,

சென்னையில் 46-வது புத்தக கண்காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கடந்த 6-ந்தேதி தொடங்கி வரும் 22-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இங்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு ஏராளமான புத்தகங்களை வைக்கப்பட்டுள்ளன.

இந்த புத்தக கண்காட்சிக்கு இன்று வரை சுமார் 3 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர். குறிப்பாக இன்றைய தினம் வார விடுமுறை என்பதால் அதிக அளவில் மக்கள் வருகை தந்து புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனர்.

இந்த புத்தக கண்காட்சியில் புகழ் பெற்ற எழுத்தாளர்களின் புத்தகங்கள், நவீன எழுத்தாளர்களின் படைப்புகள், கவிதைத் தொகுப்புகள், கட்டுரைப் புத்தகங்கள், அறிவியல், புனைவு இலக்கியங்கள், நாவல்கள், சிறுவர்களுக்கான புத்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்புகளில் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து