தமிழக செய்திகள்

5 பொக்லைனால் இடித்து தள்ளப்பட்ட ராட்சத தீண்டாமை சுவர்!-கும்மிடிப்பூண்டியில் போலீசார் குவிப்பு

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே தோக்கம்பூர் பகுதியில் 7 ஆண்டுக்கு பின் தீண்டாமை சுவர் இடிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள தோக்கம்பூர் கிராமத்தில் கடந்த 7 ஆண்டுக்கு முன்பு ஆதி திராவிட குடியிருப்பை ஒட்டி ஊர் பெரியவர்கள் சிலர் 90 அடி நீளத்திற்கும், 8 அடி உயரத்திற்கும் சுவர் ஒன்றை எழுப்பினர்.

இந்த சுவர் தீண்டாமை சுவர் என கருத்தில் கொண்டு இதனை அகற்ற வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சி, தீண்டாமை இயக்கம் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து இருந்தனர். அந்த கிராமத்து மக்களும் கோரிக்கை வைத்து இருந்தனர்.

இந்த நிலையில், இந்த தீண்டாமை சுவர் இன்று காலை 5 மணியளவில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசாரை கொண்டு வருவாய்த்துறையினர் 5க்கும் மேற்பட்ட பொக்லைன் இயந்திரங்களை கொண்டு இடித்துத்தள்ளினர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு